Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் அதிகரித்து வரும் நிலையில் அதிகளவில் உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அதன் ஒரு பகுதியாக வருகின்ற 10- தேதி 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து நன்னிலம் அருகே உள்ள குமார மங்கலத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மது பிரியர்கள் மது வாங்க கூட்டம் கூட்டமாக குவிந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்கால் பகுதிகளிலிருந்து மது பிரியர்கள் அதிக அளவில் குவிந்து சமூக இடைவெளியை மறந்து முககவசம் இல்லாமல் மது பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கி சென்றதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.